articles

img

எங்கே வெளிப்படைத்தன்மை?

நிலையான அரசு, விரைவான வளர்ச்சி என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதப் பட்டுக் கொண்டிருக்கிறார். நேர்மையான அரசு, ஊழலற்ற அரசு என்று சொல்லிக் கொண்டி ருந்தது வெளுத்துப் போய் விட்டதால் அவ்வப் போது முழக்கங்களை மாற்றிக் கொள்வதற்கு மோடி சளைப்பதில்லை. வெளிப்படையான அரசு என்று சொல்லிக் கொண்டிருந்ததும் வெளுத்துப் போய்விட்டது.

தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பவர்களின் விபரங்களை அறிய பொது மக்களுக்கு உரிமை இல்லை என்று ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணி திங்களன்று உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அத்துடன் அடிப்படை உரிமைக ளுக்கு கட்டுப்பாடு விதிக்க அரசுக்கு உரிமை உள்ளது என்றும் கூறியுள்ளது அரசு.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வாங்கு வதற்கு உரிமை உள்ளது என்றால் நாட்டு மக்க ளுக்கு அதை வழங்கியவர்கள் யார் என்று அறிய  உரிமையில்லையா? அதை மறுப்பது மோடி அரசின் ஜனநாயக விரோதமான நடவடிக்கை அல்லவா? இந்தச் சட்டம் கொண்டு வந்ததே நிதி.

மசோதா என்ற பெயரில் குறுக்கு வழியில்தானே?

அப்போது அரசு சார்பில் கூறப்பட்டது என்ன? தேர்தல் நிதியை ரொக்கமாக அளிப்ப தற்கு மாற்றாகவும் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும் தான் என்பதுதானே. ஆனால் நடப்பது நேர்மாறாகவே உள்ளது. சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பது பாஜகவின ருக்கு பழக்கமானதுதான்.

எவ்வளவு நிதி பெறப்பட்டுள்ளது என்று கூறப்படும் பொழுது அவை யார் யாரிடம் இருந்து பெறப்பட்டது என்று கூறுவதில் என்ன தவறு? இந்த உண்மையைச் சொன்னால் மோடி அரசின் கூட்டுக்களவாணி முதலாளித்துவக் கொள்ளை, ஊழல் பட்டவர்த்தனமாகத் தெரிந்துவிடும். குட்டு வெளிப்பட்டுவிடும் என்ற அச்சம்தான்.

2017-18-இல் பாஜக பெற்றது ரூ.210 கோடி. 2018-19-இல் பெற்றது ரூ.1450 கோடி. இதில் 68 சதவீதம் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதத் தில். அதாவது மக்களவைத் தேர்தலின் போது 8,9,10 ஆம் கட்டத் தேர்தல் காலத்தில். இப்படிப் பெற்ற பணத்தை கொண்டு தேர்தலில் ஆதிக்கம் செலுத்துவதும் வெற்றி தோல்வியை நிர்ணயிப்ப தும் சாத்தியம் தானே!

ஆளும் கட்சியின் நிர்ப்பந்தம், சலுகைகளால் முதலாளிகளிடமிருந்து நிதி பெற்றது. அம்பலப் பட்டுவிடும். ஊழல் வெளிப்பட்டு விடும் என்பது தானே காரணம். மடியில் கனம் இல்லை யெனில் வழியில் பயம் தேவையில்லையே! உங்களது கள்ளக் கூட்டணியை மறைக்கத் தானே மக்களின் தகவல் அறியும் உரிமையை மறுக்கிறீர்கள்? இது 2024 தேர்தலில் முடிவுக்கு வந்துவிடும். வர வேண்டும்.